செவ்வாய், ஜூன் 19, 2012

இசையின் திசையில்...

             சில இசைகள் நம்மை நெகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்று விடும். சில இசைகளை கேட்டாலே மனதில் உள்ள பாரங்கள் எல்லாம் இறங்கி விடும். இப்படி  இசைகளை கேட்கத் தெரிந்த நமக்கு அந்த இசைகளின் ராகங்கள் பற்றி அறிய வாய்ப்பில்லை. தமிழ் சினிமாவில் இதுவரை தவிர்க்க முடியாத சில ராகங்களை உங்களுக்கு தருவிதில் மகிழ்ச்சியடைகிறேன்.

1.'தோடி' ராகத்தில் அமைந்த பாடல்கள்



பாடல்
:
கங்கைக்கரை மன்னனடி
   
படம்
:
வருஷம்-16 (1989)
   
பாடியவர்
:
K.J.யேசுதாஸ்
   
இசையமைப்பாளர்
:
இளையராஜா

2. "ஆபோகிராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்

பாடல்
:
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே
   
படம்
:
வைதேகி காந்திருந்தாள்(1984)
   
பாடியவர்
:
 ஜெயசந்திரன், வாணி ஜெயராம்
   
இசையமைப்பாளர்
:
 இளையராஜா
   



பாடல்
:
கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும்
   
படம்
:
சந்திரமுகி(2005)
   
பாடியவர்
:
 ஆஷா பான்ஸ்லே மதுபாலகிருஷ்ணன்
   
இசையமைப்பாளர்
:
 வித்யாசாகர்
 
3. ‘காபிராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள் :

 பாடல் ஹேபாடல் ஒன்று   படம் ப்ரியா (1978)   பாடியவர்  S.ஜானகி, K.J.யேசுதாஸ்   இசையமைப்பாளர்  இளையராஜா.

பாடல் என்மேல் விழுந்த மழைத் துளியே   படம் மே மாதம் (1994)   பாடியவர்  ஜெயச்சந்திரன்   இசையமைப்பாளர்  A.R.ரஹ்மான.

பாடல் குச்சி குச்சி ராக்கம்மா   படம் பம்பாய்(1995)   பாடியவர்  ஹரிஹரன் குழுவினர்   இசையமைப்பாளர்  A.R.ரஹ்மான.

 பாடல் கண்ணே கலைமானே   படம் மூன்றாம் பிறை(1982)   பாடியவர்  K.J.யேசுதாஸ்   இசையமைப்பாளர் இளையராஜா   இயற்றியவர் கண்ணதாசன்.

4. ‘மலையமாருதம்ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள் :

1985ல் வெளியான தென்றலே என்னைத் தொடுஎன்ற திரைபடத்தில் வைரமுத்து இயற்றி, இளையராஜா இசையமைத்து K.J.யேசுதாஸ், உமா ரமணன் பாடிய "கண்மணி நீ வரக் காத்திருந்தேன்" என்ற பாடல் மலைய மாருத்த்தில் இருந்தது.

1983ல் வெளியான ஒரு ஓடை நதியாகிறது...’ என்ற படத்தில் இளையராஜாஇசையமைக்க தீபன் சக்ரவர்த்தியும் உமா ரமணனும் இணைந்து பாடிய தென்றல் என்னை முத்தமிட்டது...என்ற பாடல்.

5.‘வாசந்தி’

1975ல் வெளிவந்த ‘அவன்தான் மனிதன்’ என்ற படத் தில் கண்ணதாசன் இயற்றி, M.S. விஸ்வநாதன் இசையமைக்க T.M.சவுந்தர ராஜன் ,P.சுசீலா இணைந்து பாடிய..."அன்பு நடமாடும் கலைக் கூடமே, ஆசை மழைமேகமே...’ என்ற பாடல் ‘வாசந்தி’ ராகத்தில் இருந்தது. அதிகமாகப் பயன்படுத்தப்படாத ராகமிது!

1999ல் வெளியான ‘முதல்வன்’ படத்தில் வைரமுத்து இயற்றி A.R.ரஹ்மான் இசையமைக்க ஹரிஹரனும் கவித சுப்ரமணியமும் இணைந்து பாடிய....“குறுக்கு சிறுத்தளவளே” என்ற பாடல், வாசந்தி ராகம் தான்!


6.‘பந்துவராளி‘ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள்:
 
1975ல் வெளியான “வைர நெஞ்சம்”என்ற படத்தில் M.S.விஸ்வநாதன் இசையில் “நீராட நேரம் நல்ல நேரம்...”என்ற பாடல்.

“வாழ்வே மாயம்” (1982) என்ற படத்தில் கங்கை அமரன் இசையமைப்பில் S.P. பாலசுப்ரமணியம் பாடிய… “வந்தனம்...” என்ற பாடல்.

“ராஜபார்வை”(1981) என்ற படத்தில் வைரமுத்து இயற்றி, இளையராஜா இசையமைப்பில் S.P. பாலசுப்ரமணியம், S. ஜானகி இணைந்து பாடிய... ‘அந்தி மழை பொழிகிறது”என்ற பாடல்.

“அபூர்வ ராகங்கள்”(1975) என்ற படத்தில் கண்ணதாசன் இயற்றி M.S.விஸ்வநாதன் இசையமைக்க, வாணி ஜெயராம் பாடிய... “ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்...” என்ற பாடலின் பல்லவி மட்டும் பந்துவராளி ராகம் தான்!

சின்ன தம்பி படத்தில் குஷ்பூ
7.‘கீரவாணி’ ராகத்தில் அமைந்த திரைப்படப் பாடல்கள் 

பாடல் : காற்றில் என்றன் ஜீவன். படம் : ஜானி(1980) பாடியவர் : S.ஜானகி     இசையமைப்பாளர் : இளையராஜா

பாடல் :மண்ணில் இந்தக் காதலின்றி யாரும். படம் : கேளடி கண்மணி(1990)     பாடியவர் : S.P.பாலசுப்ர மணியம்  இசையமைப்பாளர் : இளையராஜா.

பாடல் : போவோமா ஊர் கோலம், படம் சின்னத்தம்பி (1991) , பாடியவர் : சித்ரா  இசையமைப்பாளர் :இளையராஜா, இயற்றியவர் : வாலி'