வியாழன், மார்ச் 11, 2021

மார்ச்சு 11, Back To Form


👉 மீண்டு வந்தேன். மீண்டும் வந்தேன்😊.

இணைய  சொந்தங்களுக்கு வணக்கம். 2009-ஆம் ஆண்டு திருச்சியில் இருந்து என்னுடைய இந்த பிளாக்கிங் எழுத்துப் பணியைத் தொடங்கினேன். பிறகு சில பதிவுகளை போட்டுவிட்டு அப்படியே வேறு வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.


ஆரம்பத்தில் நான் என்னுடைய அறிவை பெருக்கி கொள்வதற்கும், இருக்கும் நேரத்தை பயனுள்ள வகையில் கழிப்பதற்கு எழுத ஆரம்பித்தேன். இடையில் நிறுத்தி விட்டேன். ஆனால், அன்றைய அறிவுக்கு தகுந்த எழுத்துக்களை எழுதிய போதே உலக நாடுகளில் இருந்து பலர் என்னுடைய வலைத்தளத்தை பார்வையிட்டுள்ளனர். 

அதன் நீட்சியாக இப்போதுபல போராடட ங்களில் இருந்து  மீண்டு வந்து, மீண்டும் வந்து இதோ உங்கள் முன் எழுத வந்துள்ளேன். உலக நாடுகள் பற்றிய பல தகவல்களை நீங்கள் படித்திருந்தாலும், கேள்வி பட்டிருந்தாலும், இந்த வலைத்தளத்தில் நீங்கள் இதுவரை கேள்விப்பட்டிராத, Exclusive தகவல்களை உங்களுக்கு தர போகிறேன். நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். உலக நாடுகள் மட்டுமல்லாது, பிற விஷியங்களையும்,  மற்றவர்களுக்கு பயன்தரும் பதிவுகளையும் இங்கே காணலாம். 


தற்போது மீண்டும் எழுதும் ஆர்வம் வந்ததால், Varalaatrilindru.blogspot.com என்ற பகுதியில் எனக்குத் தெரிந்தது, நான் பார்த்தது, நான் படித்தது, நான் கேள்விப்பட்டது, என்னை சுற்றி நடப்பது என, அனைத்தையும் எழுத ஆரம்பித்தேன். நீண்ட வருடங்களுக்கு பிறகு "சந்தித்ததும் சிந்தித்ததும்" என்கிற இந்த பகுதியில், எழுத ஆரம்பித்துள்ளேன்.


மக்களுக்கும், வாசகர்களுக்கும், தேவையான, பல நல்ல விடயங்கள் மட்டுமே இருக்கும் என்பதற்கு முத்திரை குத்தி உத்திரவாதம் தருகிறேன்.பதிவை பாருங்கள், படியுங்கள், நன்றாக இருந்தால் பாராட்டுங்கள், நன்றாக இல்லையெனில் திட்டுங்கள், கொட்டுங்கள், மற்றவர்களுக்கும் அப்படியே பகிருங்கள்.