செவ்வாய், டிசம்பர் 29, 2009

2010 இப்படி இருக்குமோ?

புது வருடம் இப்படி இருந்தால் எப்படி இருக்கும்?.இது ஒரு சின்ன பதிவு தான்.யார் மனதையும் புண் படுத்துவது இந்த என்னுடைய பதிவின் நோக்கமில்லை ....







* நிலாவில் தண்ணீர் கண்டு பிடித்து விட்டதால்,வருடம் முடிவதற்குள் அங்க ஒரு நீச்சல் குளம் கட்ட படலாம்...

* மாநில கவர்னர் (திவாரி) "கில்மா" புகாரில் சிக்கினதால,இந்த ஆண்டு நெறைய முதல்வர்கள் இப்படி பட்ட புகாரில் சிக்கலாம்...

* போன ஆண்டு ஊட்டியில் நிலச்சரிவு வந்ததால,இந்த வருடம் எற்காடுல வர வாய்ப்பு இருக்கலாம்...

* ப.சிதம்பரம் மேல ஷூ வீசனதால இந்த வருடம் , வேற எந்த தலைவர்கள் மேல "முறம்" வீச படலாம்...

*குடி மகன்கள் போன வருஷத்த விட பெருகிப் போயிட்டதால, சரக்குத் துறை வருமானம் ஐம்பது முதல்எனபது கோடிகள் தாண்டும்.....


* இளைய தளபதியின் வெற்றிகரமான பத்தாவது தோல்வி படம் வெளிவரலாம்...

*என் தங்கத் தலைவன் ஜே கே. ரித்தீஷ்கு அமைச்சர் பதவி கெடைக்கலாம்....தன்மானத்தோடு அந்த பதவியை என் தலைவன் தூக்கி எறியலாம்...

* கடைசியாக என்னுடைய பதிவை அரங்கேற்றம் செய்யலாம்.....
அனைவருக்கும் இனியபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .

ஞாயிறு, டிசம்பர் 20, 2009











நீண்ட நாளுக்கு பிறகு ஒரு பதிவு.
கமலும் காதலும்... "கம்மர்கட்"

சென்ற வாரம் சனிக் கிழமை ஹெலோ எஃப்ம்ல் மதியம் 12 மணி முதல் மாலை 04 மனி வரை "கமலும் காதலும்" நிகழ்சியை 04 மணி நேரம் தொகுத்து வழங்கினேன். அதில் சிலவற்றை இப்பொழுது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


பேச்சு 01
கமல் ஒரு குழப்பும்வாதி நடுத்தர வயதில்.கமல் ஒரு குழப்பவாதி இந்த வயதில். பேசாமல் பேசி, சொல்ல வரும் கருதுக்களை சொல்லி முடித்து,பட்டிக்காட்டு பாமரன் முதல்,அனைத்தும் அறிந்த அறிங்ஙர் பெரு மக்கள் வரை எல்லோரயும் யோசித்து குழம்ப வைக்கும் நிஜ குழப்பவாதி.எப்படியாவது சினிமாவில் நுழைந்தேயாக வெண்டும் என்று எண்ணி, தங்கமணி என்ற நடன உதவியாளரிடம் நடன உதவியாளராக சேர்ந்தார்.அந்த நேரத்தில் தான் "அன்னை வேளாங்கண்ணி" படத்தில் ஒரு பாடல் காட்சியில், இயேசுவாக சிலஉவை சுமந்து நடித்தார். சில காலம் காலத்தயும் சுமந்து, பிறகு இயக்குனர் பாலச்சந்தரிடம் உதவியாளராக, உஙகளுடன் வருகிறேன் என்டற உடன் " நீ நடிக்கலாமே என்றார்.உடனே பனிவின் சிகர‌மான கமல் சொன்ன வார்தை தான் இது. "நானே ஓணான் மாதிரி இருக்கேன், என்னப் போயி...?"என்று கேட்டிருக்கிறார். புரட்சித் தலைவருக்கும், பாலச்சந்தருக்கும் பிடித்து விட்டது போலும்.

அன்றே கமலுக்கு அடித்தது யோகம்.
இந்த மாபெரும் கலைனனை
அடையாளம் ண்டது தமிழ் சினிமாவின்
ஒப்பற்ற யாகம்.
(தொடரும்)...

வெள்ளி, பிப்ரவரி 13, 2009

எங்களூர் ஓடைக்கரை


எங்களூர் ஓடைக்கரை
இளைனர்களின்
அந்தப்புரம்- எனக்கு
ஆனந்தபுரம்...

சுட்டிப் பேச்சு பேசியது
குச்சிப் புடி ஆடியதும்
மனம் விட்டு பேசியதும்
மறக்க முடியாததும்
எங்களூர் ஓடைக்கரை...

காதல் பாடம் படித்த இடம்,
கவிதை எழுத கற்று கொண்ட இடம்,
கற்பனையில் மிதந்த இடம்,
கண்மணிக்கு காத்திருந்த இடம்...
எங்களூர் ஓடைக்கரை...

பொட்டு வைத்துப் பார்த்த இடம்,
பூச் சூடி ரசித்த இடம்,
கைகளை கட்டிக் கொண்டு
மெய் சிலிர்த்துப் போன இடம்
எங்களூர் ஓடைக்கரை...

செல்லமாய் பேசியதும்,
செல்லமாய் திட்டியதும்,
செல்லமாய் கடித்ததும்,
செல்லமாய் அடித்ததும்,
எங்களூர் ஓடைக்கரை...

எங்களூர் ஓடைக்கரை
இளைஞர்களின்
அந்தப்புரம்- எனக்கு
ஆனந்தபுரம்...

புதன், பிப்ரவரி 04, 2009

கிராமத்து தென்றல்...






அடர்ந்த காடுகளின் ஊடாக
கடந்து போனால் தவழ்ந்து
வருகிறது அந்த கிராமத்து தென்றல்
பச்சை பட்டடை
போர்த்தியது போல
வானுயர்ந்த மரங்கள்,

தவழ்ந்து வரும் மக்களை
அழைத்து அட்சதை தூவும்
அழகிய மலர் தோட்டங்கள்

காதலர்களுக்காகவே கடவுளால்
தரப் பட்ட அந்த
அழகிய கம்மாக்கரை...

கம்மக்கரைக்கு போட்டு
வைத்தது போல அந்த
மொட்டை பாலம்

ஊரின் ஒதுக்கு புறத்தில் உள்ள
பாட்டியம்மாவின் பெட்டி கடை...
பல்லாங்குழி ஆடும்
பள்ளி சிறுவர்கள்...

ஏர் கலப்பையை முதுகில்
தூக்கி சுமந்தபடி
செல்லும் உழவன்...
ஒற்றையடி பாதையில்
ஒரு மனிதனாக
செல்லும் ஓர் கிழவன்...
பட்டனத்தில் படிக்க
செல்லும் பெண்களின் ஒரு கூட்டம்,
பெண்களை நோட்டமிட்டபடி
செல்லும் ஆண்களின் மறு கூட்டம் ...

சிறு வயதில் பட்டம் விடவும்
பம்பரம் விடவும் கிடைத்த
பழைய நண்பர்கள்...

நீச்சல் கற்றுக் கொண்ட
அந்த செட்டியார் விட்டு
வட்ட கிணறு...

ஊரின் ஒதுக்கு புறத்தில்
மௌனம் காக்கும்
கல்லறைகள்...

இப்படியாக பல வருடங்களுக்கு
பிறகு மலர்கிறது என்
ஞாபக வெளிகளில் ..
"கற்பனை என்ற குறிஞ்சி பூ"

கண்ணீர் கண்ணீர் சிந்த
கடந்து போகிறேன்....
என் சொந்த கிராமத்திற்குள்...
கவலையை மறந்து....
" கிராமத்து தென்றல்"...

வெள்ளி, ஜனவரி 30, 2009

நிழற்குடை...

என்று தணியும் இந்த
தீராத தாகம். என் கருணை மனு
நிராகரிக்கப் பட்டதோ?

ரோட்டோரம் நிற்கும்
நிழர்குடயில் தனிமையில்
தவித்து நிற்கிறேன்...

உன்னை தரிசிக்கும் தருணம்
விரைவில் கிடைக்குமென்ற
எண்ணத்தில்...

தினமும் நிழர்குடயில்
நிற்கும் என்னை
பார்த்து விட்டு ...

பார்க்காதவள் போல
செல்கிறாய். அடியே நீ மட்டும்
ஏனடி இப்படி?

உன்னால் மட்டும்
எப்படி என்னை
ஏமாற்ற முடிகிறது?...

பெருமழை அடித்தும்
சாயாத என்னுடைய
நாணல் மனம்

உன் கடைக் கண் பார்வையில்
வில்லாய் ஒடிந்து போன
மாயம் என்ன?...

உனக்காக காத்து காத்து
என் இரண்டு கால்களும்
மறுத்து போய் விட்டது...

அந்த நிழற் குடையே எனக்கு
நிற்க நிரந்தர இடம்
கொடுத்து விட்டது...

பயணிகள் பரிதாபமாய் என்னை
பார்க்க திக்கற்றவனாய்
திகைத்து நிற்கிறேன்...

எல்லாவற்றையும் தாங்கி
கொள்கிறேன். எதற்காக
தெரியுமா?...

உன் திருக் கரம் என்றாவது
ஒரு நாள் என் மீது படும்
என்ற நம்பிக்கையில்...

வியாழன், ஜனவரி 29, 2009

ஒரு நாள் ஒரு கனவு...



நேற்று இரவு சரியாக
பனிரெண்டு மணி இருக்கும்
அயர்ந்த நித்திரை.
ஊரடங்கிப் போன "கும்" இருட்டு
எங்கு ஒரே அமைதி...

என் வீட்டு கதவு
தட தடவென்று திறக்கும்
சத்தம், என் காதுகளில்
கிணற்றில் கேட்டார் போல் கேட்டது...

எழுந்து திறக்க கூட
சக்தி இல்லாத சூழலில்
கண்ணை இருக்கும் ஆழ்ந்த உறக்கம்...

யாரோ என் தோளைத்
தொட்டு கூப்பிடும் சத்தம்
என் காதுகளில்
செவி மடுத்தன....

யார்? என்று திரும்பிப்
பார்த்த எனக்கு ஒரே
இன்ப அதிர்ச்சி, இல்லை
இன்ப அதிர்ச்சி!!!

எழுந்திரு எழுந்திரு என்று,
பதட்டமான குரலில்
என் கண்ணான கண்மணி
என் கண் முன்னே!!!

என்னடா இந்த இரவில்?
ஏன்டா வந்தாய்?
உனக்கு என்ன ஆச்சு? என்று
கேள்வி மேல் கேள்வி
கணைகளை தொடுத்தேன்...

"நேற்று நீ வேலைக்கு செல்லும்போது
எதிரே வந்த பேருந்து உன்
மீது மோதியதாக கனவு
ஒன்று கண்டேன்....

புரண்டு புரண்டு படுத்தேன்
தூக்கம் வரவில்லை
கண்ணை மூடினாலும் அந்த
விபத்து காட்சியே கண் முன்
வந்து வெடிக்கிறது...

அதனால் உன்னை ஒருகணம்
பார்த்து விட்டுப் போகலாம் என்று
யாருக்கும் தெரியாமல்
வந்தேன் என்றாள்...

என்ன சொல்வது என்று எனக்கு
எனக்கு ஒன்றுமே புரியவில்லை
அப்படி எல்லாம் நடக்காது
நீ ஒன்றும் பயப்படாதே,
இப்ப போய் படுத்து கொள்,
எதுவானாலும் காலையில்
பேசிக்கொள்ளலாம் , என்று
தட்டிக்க் கொடுத்து அனுப்பினேன் !!!

எனக்கு மனம் கேட்கவில்லை
என்னவள் தனியாக சென்றாளே
வீடு போய் செர்ந்திருப்பல என்று
எனக்குள் ஒரு பதட்டம்...

சட்டு புட்டென்று எழுந்து
நடந்தேன்- பிறகு தான் தெரிந்தது
நடந்ததெல்லாம் வெறும் கனவு என்று…

நான் ரசித்த திருச்சி மாநகரம்


தமிழகத்தின் மையப்பகுதியில் சென்னை& கன்யாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து சுமார் 320 கி.மீ. தொலைவில், கடல் மட்டத்தி லிருந்து சுமார் 78 மீட்டர் உயரத்தில் உள்ளது திருச்சி மாநகரம். இது தமிழகத்தின் மூன்றாவது பெரிய மாநகராட்சி. காவேரி பிரிந்தோடும் பகுதிகளில் அழகிய கோவில்கள், சிறப்பான கல்வி வழங்கும் பள்ளிகள், பாய்லர் தொழிற்சாலை என்று பல பெருமைகளைக்கொண்டது திருச்சி மாவட்டம்... எனக்கு மிகவும் பிடித்த இரு இடங்கள் என்றால் அது ஸ்ரீரங்கம்(ம)திருவானைக்கோவில்/பெரியகோயிலும் தான்... இப்படிப்பட்ட திருச்சி சங்க காலத்திலிருந்தே முக்கியத்துவத்துடன் திகழ்ந்தது என்பது எனக்கு மிகவும் பெருமைப்படும் விசயமாகப் போனதால் இந்த பதிவு..

பழம்பெருமை
தமிழ்நாட்டிலுள்ள குறிப்பிடத்தக்க நகரங்களுள் ஒன்று திருச்சிராப்பள்ளி. இந்நகரம் தமிழ்நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் தமிழ்நாட்டின் இதயம் என மக்கள் குறிப்பிடுவர். இப்பகுதியில் பழைய கற்காலத்திற்கும், புதிய கற்காலத்திற்கும் இடையிலுள்ள நுண்கருவிகளைப் பயன்படுத்திய காலத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. திருச்சிராப்பள்ளி இரயில் சந்திப்பின் அருகிலுள்ள நுண்ணலை ஒலிபரப்பு நிலையத்தின்(micro wave station)அருகிலுள்ள திடலில் நுண்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நுண்கருவிகளின் காலம் சுமார் கி.மு.3000 ஆண்டாகும். இக்கண்டுபிடிப்பிலிருந்து கி.மு. 3000 ஆண்டிலேயே திருச்சிராப்பள்ளியில் மக்கள் வாழத்தொடங்கிவிட்டனர் என்பது தெளிவாகிறது.

இலக்கியம் காட்டும் வரலாறு
சங்க இலக்கியங்களில் திருச்சிராப்பள்ளியைப் பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை. ஆனால் கடைச்சங்க நூல்களுள் ஒன்றாகிய அகநானூற்றில் 'கறங்கிசைவிழவின் உறதைக்குணாது நெடும் பெருங்குன்றம்' என்று உறையூர்க்குக் கிழக்கே ஒரு குன்று கூறப்பட்டுள்ளது. அதன் பெயர் அது அமைந்துள்ள ஊரின் பெயர் அப்பாடலில் குறிக்கப்படவில்லை. ஆயின் சைவ சமயக் குரவர்களாகிய திருஞானசம்மந்தரும், திருநாவுக்கரசரும் அக்குன்றின் மேல் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள சிவபெருமான் மீது பாடியுள்ள பதிகங்களிலே அக்குன்றினைச் சிராப்பள்ளி என்ற பெயரால் அழைத்துள்ளதைக் காண்கிறோம்.
கி.பி ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆட்சிபுரிந்த பல்லவ வேந்தனாகிய முதலாம் மகேந்திரவர்மன் சிராப்பள்ளிப் பெருங்குன்றை ஓரிடத்தில் குடைந்து சிவபெருமானுக்குக் கோயில் எடுப்பித்தான். வடமொழியில் சிறந்த புலமைப் பெற்றிருந்த அவ்வேந்தன் எட்டு சுலோகங்கள் இயற்றி அவற்றைத் தான் எடுப்பித்த அச்சுலோகங்களிலிருந்து தான் புறச்சமயத்திலிருந்து திரும்பிச் சிவநெறியைக் கடைப்பிடித்துச் சைவனாகியதையும் சிராப்பள்ளிக் குன்றின் மேற்குகைக் கோயிலிற் சிவலிங்கத்தை எழுந்தருளிவித்ததையும் குறிப்பிட்டுள்ளான். இச்செய்திகளை நுணுகி நோக்குமிடத்து அம்மன்னனது ஆட்சியின் பிற்பகுதியிலே தான் சிராப்பள்ளிக் குன்றிற் சிவாலயம் அமைக்கப் பெற்றிருத்தல் வேண்டும் என்பதும் அதற்கு முன்னர் அவன் சமண சமயத்தை தழுவியிருந்த காலத்தில் அங்கே சிவாலயம் இருந்திலது என்பதும் புலனாகிறது.

ஊர்ப்பெயர்க்காரணம்
சிராப்பள்ளிக் குன்றின் மேலுள்ள உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குப் பின்புறம் சமண முனிவர்களின் கற்படுகைகள் பல கற்தலையணைகளோடு இருத்தலை இன்றும் காணலாம். இத்தலையணைகளில் அவற்றை உபயோகித்த சமண முனிவர்களின் பெயர் வரையப் பெற்றிருக்கின்றன. அவ்வெழுத்துக்களைக் கொண்டு அவற்றின் காலத்தை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம். எனவே கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் குன்றின் மேல் சில சமண முனிவர்கள் தங்கித் தவம் புரிந்து வந்துள்ளமை அறியப்படுகிறது. அவர்களுள் 'சிரா' என்ற முனிவர் ஒருவர் இருந்தமை அங்குள்ள கல்வெட்டுகளால் அறியப்படுகிறது. அம்முனிவர் அத்தவப்பள்ளியின் தலைவராய் இருந்தமைப் பற்றி அது சிராப்பள்ளி என்று முதலில் வழங்கப் பட்டு அவர் காலத்திற்குப் பிறகும் அப்பெயரோடு நின்று நிலவுவதாயிற்று.

நால்வரும் சிராப்பள்ளியும்
சைவ சமயக்குரவர்களாகிய திருஞானசம்மந்தரும், திருநாவுக்கரசரும் தம் காலத்தில் வழங்கி வந்த சிராப்பள்ளி என்ற அப்பெயரைத் தாம் அக்கோயிலிற் பாடியருளிய பதிகங்களிற் குறிப்பிட்டுச் செல்லுவராயினர். ஆகவே 'சிரா' என்ற சமண முனிவரது தவப்பள்ளியின் பெயராயிருந்த சிராப்பள்ளி என்பது பின்னர் முதலாம் மகேந்திரவர்மன் அங்கு எடுப்பித்த சிவன் கோயிலின் பெயராக மாறிவிட்டமை அறியத்தக்கது. அக்கோயிலின் பெயரே பின்னர் 'திரு' என்ற அடைமொழி சேர்த்து 'திருச்சிராப்பள்ளி' என்ற ஊருக்கும் பெயராக மாறிவிட்டது.
திருச்சிராமலைக் குன்றின் மேல் மகேந்திரவர்மன் அமைத்த குடவரைக் கோயிலில் சிராமலைந்தாதி பொறிக்கப்பட்டுள்ளது. இது கி.பி. 10 - ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அக்கல்வெட்டு சிராமலையைப் பொன்மலை என்றும் திருமலை என்றும் பல பாடல்களில் குறிப்பிடுகிறது. அவ்வந்தாதியின் முதல் பாடல் உறையூர் நகரம் என்றும் சிராப்பள்ளி குன்று அதன் அயலது என்றும் சிராமலையின் பண்டைய நிலையைச் சுட்டுகின்றது.

சிற்றம்பரே சிறாப்பள்ளி
திருச்சிராப்பள்ளி மேற்குகைக் கோயிலில் முதலாம் இராஜராஜ சோழனின் 16ம் ஆண்டுக்(கி.பி. 1001) கல்வெட்டொன்றுள்ளது. அக்கல்வெட்டு விக்ரமசிங்க மூவேந்த வேளான் என்பவன் விளத்தூர் நாட்டு ஆலங்குடியில் நிலம் விலைக்கு வாங்கி அதனை உறையூர்க் கூற்றத்துச் சிற்றம்பரிலுள்ள சிராப்பள்ளிக் கோயிலுக்கு அளித்தனன் என்று கூறுகிறது. அதனை ஆராயுமிடத்து அத்தலைவனால் இறையிலி நிலம் வழங்கப் பெற்ற சிவன் கோயில் சிராப்பள்ளி என்னும் பெயருடையது என்பது அவ்வூர் உறையூர் கூற்றத்திலுள்ளது என்பதும் நன்கு புலனாகும். கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இரண்டாம் வரகுண பாண்டியனது ஆட்சியின் 11-ம் ஆண்டில் அக்கோயிலிற் பொறிக்கப் பெற்றுள்ள வேறொரு கல்வெட்டொன்றும் ஊரைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது 'சிற்றம்பர் நகர்' எனவும் 'சிற்றம்பர்பதி' எனவும் குறிப்பிடுகிறது.
தமிழ்நாட்டில் அம்பர், இன்னம்பர், நல்லம்பர் என்ற ஊர்கள் இருந்ததைப் பலர் அறிவர். அவ்வூர்களைப் போல சிற்றம்பர் என்ற ஊரும் இருந்துள்ளது. அக்காலத்தில் அவ்வூரின் பெயர் மறைந்தொழிந்தது. அவ்வூர் திருச்சிராப்பள்ளி என்னும் பெயருடன் இப்பொழுதும் வழங்குகிறது. எனினும் ஆங்கிலேயர்களது பேச்சு வழக்கின் காரணமாக 'டிரிச்சி' என்றழைக்கப்பட்டு திருச்சி என்று இன்றும் மக்களது பேச்சு வழக்கில் இருந்து வருகிறது
திருச்சிராப்பள்ளி என்ற பெயர் ஒரு ஊரின் தலைவனுக்கும் இருந்ததாக வீரபாண்டியனின் சிவகாசி செப்பேட்டின் மூலம் அறிகிறோம். அச்செப்பேட்டில் பெண் யானையை வலமாக நடத்திச் சென்றவன் முள்ளிராஷ்டிரத்தில் குலக்கிராமம் என்ற ஊரின் தலைவன். அவன் பெயர் திருச்சிராப்பள்ளி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை திருச்சிராப்பள்ளி பல்லவ, சோழ, பாண்டிய மன்னர்களின் ஆளுகையின் கீழ் இருந்தது. கி.பி. 13ம் நூற்றாண்டுல் போசளர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. போசளர்கள் திருச்சிராப்பள்ளியை அடுத்த கண்ணனூரில் தலைநகர் அமைத்து சோழநாட்டின் பகுதியை ஆளத் தொடங்கினர். பாண்டிய மன்ன முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்(கி.பி. 1251 - 1271) போசளரைத் தாக்கி முன்னோர் ஆட்சிக்குட்பட்டிருந்த சோனாட்டுப் பகுதியைத் தன்னடிப்படுத்த எண்ணினான். அதனை நிறைவேற்றும் பொருட்டுத் பெரும்படையுடன் சென்று அப்போசளர்க்குரிய நகரமாகத் திருச்சிராப்பள்ளிக்கு அருகிலிருந்த கண்ணனூர் கொப்பத்தை முற்றுகையிட்டு வெற்றிபெற்றான். போசளர்கள் மூன்றாம் ராஜராஜசோழன் காலம் முதல் தமக்குரியதாக வைத்திருந்த கண்ணனூர் கொப்பத்தை இழந்துவிட்டிருந்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மாதேவியிலுள்ள முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் 20-ம் ஆண்டு ஆட்சி கல்வெட்டு(கி.பி. 1288) இவன் மலைநாடு, சோழநாடு, ஈழநாடு, தொண்டை நாடு என்பவற்றை வென்றனன் என்று குறிப்பிடுகிறது. சோழநாடு, நடுநாடு, தொண்டை நாடுகளிலுள்ள பல ஊர்களில் இவன் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. எனவே அந்நாடுகள் எல்லாம் இவன் ஆட்சிக்குட்பட்டிருந்த என்பது தெளிவு. திருச்சிராப்பள்ளி சோழநாட்டில் இருந்தபடியால் இவனது ஆட்சிக்காலத்தில்(கி.பி 1269 - 1311) இவனுடைய ஆளுகையின் கீழிருந்தது. கி.பி 14ம் நூற்றாண்டில் திருச்சிராப்பள்ளி விஜய நகரப் பேரரசின் ஆளுகையின் கீழ் வந்தது. விஜயநகரப் பேரரசன் இரண்டாம் தேவராயன் இறந்ததும் கலிங்கத்து மன்னன் கபிலேசுர கஜபதி விஜய நகரப் பேரரசன் பல இடங்களையும்கைப்பற்றி இறுதியில் திருச்சிராப்பள்ளியையும் கைப்பற்றினான். கலிங்க மன்னன் கபிலேகரகஜபதிக்குப் பிறகு(கி.பி. 1463 - 64) சாளுவ நரசிம்மனின் ஆட்சி காவிரியின் வடகரையோடு தடைப்பட்டு நின்றுவிட்டது. அவனுக்குப் பிறகு விஜயநகர பேரரசை முறை கேடாகக் கைப்பற்றி அரசாண்ட நரசநாயக்கன் கி.பி. 1496ல் தன் ஆதிக்கத்தைக் கன்னியாகுமரி வரைப் பரப்பினான்.விஜயநகர பேரரசுக்குப் பின்னர் ஆட்சி செலுத்திய விஸ்வநாத நாயக்கன்(கி.பி 1529-64) காலத்தில் திருச்சிராப்பள்ளி நாயக்கர் ஆட்சி கீழ் வந்தது. முதலாம் சொக்கநாத நாயக்கன் காலத்தில்(கி.பி. 1659-1682) திருச்சிராப்பள்ளி மதுரை நாயக்கர்களின் தலைநகரமாக்கப்பட்டது. முஸ்லீம்களும் மராட்டியர்களும் திருச்சிராப்பள்ளியின் மீது படையெடுத்தனர். ருஸ்தும்கான் என்ற முஸ்லீம் நாடோடி மன்னன் ஒருவன் கி.பி. 1682ல் திருச்சிராப்பள்ளியைக் கைப்பற்றி நாயக்கரின் அரியணையில் இரண்டாண்டுகள் இன்புற்றான். சொக்கநாத நாயக்கன் ஆட்சியின் இறுதியில் மைசூர் படைகள் திருச்சிராப்பள்ளியை முற்றுகையிட்டன. ஆனால் செஞ்சி, தஞ்சாவூர், மராட்டிய மன்னரின் துணையைக் கொண்டு சொக்கநாதன் மைசூர் படைகளைத் திருச்சிராப்பள்ளியிலிருந்து விரட்டினான்.
மேற்கூறிய வரலாற்று நிகழ்ச்சிகளுக்கும் பின்னர் கி.பி. 1801ம் ஆண்டில் திருச்சாரப்பள்ளி ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் வந்தது. 1947ம் ஆண்டு ஆக்ஸ்ட் 15ம் நாள் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்றாக திருச்சிராப்பள்ளி திகழ்ந்து வருகிறது.திருச்சிராப்பள்ளியிலும் அதனைச் சுற்றியுள்ள இடங்களிலும் வரலாறு கூறும் கல்வெட்டுகளும், ஆலயங்களும், சிற்பங்களும் செப்புத் திருமேனிகளும், ஓவியங்களும், கட்டடங்களும் ஊரின் பழமையையும் சிறப்பையும் எடுத்துரைக்கும் வண்ணம் அமைந்துள்ளன.

புதன், ஜனவரி 28, 2009

விடியாத இரவுகள் !!!

(முதல் கவிதை)

விடிய விடிய படித்தேன்
விழித்திருந்து
விடிந்த பிறகும் படித்தேன்
வாழ்க்கை விடியுமென்று.

அப்பா பணம் அனுப்பினார்
மகன் பட்டணத்தில் படிக்கிறானென்று
பணத்தை செலவழித்தேன்
என் அப்பன் பணக்காரனென்று.


அக்கா கடிதம் போட்டாள்
நன்றாக படிக்க வேண்டும் என்று
அவளுக்கு பதிலனுப்பினேன்
நன்றாக படிக்கிறேனென்று.

படித்தேன் முடித்தேன்
பட்டமும் பெற்றேன்
மற்றவர்களைப் போல நானும்
முதல் தரத்தில் தேறினேன்.

பட்டம் பெற்ற மகிழ்ச்சியில்
துள்ளி குதித்தேன்
வீட்டிலயும் வெளியுலும் முதல்
பட்டம் என்ற பெருமிதத்தோடு.

என் மகிழ்ச்சியும் சந்தோஷமும்
கொஞ்ச நாள் தான் நீடித்தது
என் மன கோட்டை
மணல் கோட்டையாய் சரிந்து விழுந்தது.

வேலைக்கு விண்ணப்பம் அனுப்புவதே
பெரிய வேலையாய் இருந்தது
வீட்டில் கொடுத்த கொஞ்ச பணமும்
செலவழிந்து போனது.



செய்வதறியாது திகைத்து நின்றேன்
கவலையில் கண்ணீர் விட்டேன்
கண் விழித்து படித்தது கானல் நீராய்
போனது என்று உணர்ந்தேன்.

பகலில் கிடைக்கும் வேலையை
செய்து விட்டு இரவில்
விசும்பிக் கொண்டிருந்தேன்
விரைவில் விடியுமென்று.

இரவுகள் இரவுகளாய் இருப்பதில்லை
இரவுகள் விடியாமலும் போவதில்லை
 

எனவே...
என் கஷ்டங்களும் இனி நீளுவதில்லை
என்று,  நம்பிக்கையில் நடமாடுகிறேன்
நல்லதொரு வேலை கிடைக்குமென்று...

விடியாத
இரவுகள் !!!
விடியட்டும் வெகு விரைவில் ...!!!


 

மன்னித்துக்கொள்...

காதல் உன் கடிதங்களோடு
உன் எல்லாவற்றையும்
திருப்பி கேட்டாய். தந்தேன்!

மன்னித்துக்கொள்!!
உன் காதலை திருப்பி கேட்ட
உனக்கு என் காதலையும்
கேட்டது என்ன நியாயம்???

என் காதல் மட்டும் இன்னும் அப்படியே...
நீ விட்டு போன மீதி
வசந்தங்களோடு நன்றாகவே!!!!

நான் மட்டும் தொலைந்து
போன அந்த நாட்களை
இன்னமும் தேடுகின்றேன்
திருடப்பட்டது புரியாமல்!!!!!

நேர்மை...

தூக்கத்தின்கரையோரமாய்
அமர்ந்து,அழுது
கொண்டிருந்தேன்.

ஆனந்தங்களால்
செய்தகவிதையொன்றுடன் மேலெழும்பி"
இது உன்னுடையதா?"என்றாய்.
இல்லை என்றேன்.
உள்ளே சென்று விட்டாய்.
இம்முறை,

மனிதர்களால் எழுத சாத்தியப்படாத,
உனைப்பற்றியகவிதையொன்றுடன் வந்தாய்.
மிகுந்த நேர்மையுடன்,
என்னுடையது இல்லையென்றேன்.

வட்டமிடும் அலைப்பரப்புகளின்
ஊடாகஉள்ளே சென்ற நீ,
விடியும் வரைவரவே இல்லை.'
உன் நேர்மைக்கு பரிசாய்
என்னையே எடுத்துக்கொள்'
என்று கூறியபடி. . .