திங்கள், ஜனவரி 31, 2011

நான் ரசித்த ஹலோ எப்.எம்.
அக்டோபர் 2ம் தேதி 2006ம் தேதி சென்னை மக்களின் புதிய பொழுது போக்கு மற்றும் ஜனரஞ்சகமான விஷியங்களுக்காக , "நல்ல இசை, செல்லத் தமிழ்" என்ற தாரக மந்திரத்தோடு, சின்னக் குழந்தையாக, செல்லக் குழந்தையாக , ஹலோ எப்.எம் 106.4. இனிதே உதயமானது. அது வரை, ம்ற்ற‌ பண்பலைகளை கேட்டு, கேட்டு, போரடித்த சென்னை வாசிகளுக்கு, இது புது வரவு, அதிக மன நிறைவு, என்றே சொல்லலாம். நிகழ்ச்சிகளில் புதிய யுக்திகள் என்று மட்டுமில்லாமல், புதிய சிந்தனைகளுடன் படித்த அறிவாளி முதல், பட்டிக் காட்டு பாமரன் வரை, எட்டுத்திக்கும் ஓங்கி ஒலிக்கும் கொட்டும் முரசாக மாறியதில், ஆச்சர்யம் ஒன்றுமில்லை. நாளொரு மேனியும் பொழுதொரு வன்னமுமாக‌ சென்னை வாசிகளின் அசைகக முடியாத பேராதரவோடு, தமிழகத்தின் பண்பலை வரிசைகளில் முன்னனி இடத்தை பெற்று தனிப் பெரும் சக்தியாக உருவெடுத்தது.
கிளைகளுடன், களைகளைப் போக்க!
அடுத்தடுத்தத் வருடங்களில், தமிழகம் மற்றும் புதுவையில் 7 இடங்களில், மற்ற நேயர்களின் களைகளை போக்க‌ கவலைகளை நீக்க, தனது கிளைகளை நிறுவியது. கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற கூற்றுக்கு ஏற்றது போல், கால் தடம் பதிக்கும் அனைத்து இடங்களிலும், வெற்றி பெற்றது. ஒருமுறை ஒரு நேயர் இந்த ஹலோ எப்.எம்‍மை
கேட்க தொடங்கி விட்டால், பிறகு இதை விட்டு வெளியேருவது கஷ்டம் என்ற, நல்ல நிலை தான் இதற்கு காரணம்.
அணல் பறக்கும் சாதனைகள்.
மற்ற ரேடியோ நிறுவனங்களுக்கும், ஹலோ எப்.எம் மின் நிகழ்ச்சிகளுக்கும் விதியாசங்க‌ள் அதிகம். இந்த ஒரு காரணத்துக்காகவே, அதிகப் படியான நேயர்களைப் பெற்றுள்ளது. களத்தில் விளையாடும் கிரிக்கெட்டைப் போலவே, விளையாட முடியும் என்பதை செய்து, சாதித்துக் காட்டியது, மிகப் பெறிய சாதனையே!. இதை பின் பற்றி இன்று, இதைப் போலவே நிறைய இடங்களில் செய்யத் தொடங்கி விட்டார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. தொலை பேசியின் வாயிலாக நேயர்கள், ரன்களை கணித்து சொன்னால், பணத்தை வெல்லலம், என்பதே இதன் நோக்கம்.

பெற்றால் தான் பிள்ளையா?
இலாப நோக்கத்திற்க்காகவும், வர்த்தக ரீதியாகவும் மட்டுமே அடிப்படயாக ஆரம்பிக்கப் படும் சில மீடியா க்கலை ,பெற்றால் தான் பிள்ளையா? என்ற உயர்ந்த திட்டதின் மூலம் , இந்தக் கருத்துக்களை பின்னுக்குத் தள்ளியது, ஹலோ எப். எம் , மின் மிகப் பெறிய சாதனை. பி. எஸ். ஐ. என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த திட்டத்தை வெற்றி பெற வைக்க
நேயர்களுடன் இணைந்து, தானும் ஒரு நேயராக, மனிதாபிமான மனிதனாக இணைந்தார், பத்ம ஸ்ரீ கமல்ஹாசன். எச்.ஐ.வி‍ யால் பாதிக்கப் பட்ட ஏழைக் குழந்தைகளுக்காக தலா 750 ரூபாய் நிதியாக, ஹலோ எப். எம் , மின் நேயர்களிடமிருந்து பெறப் பட்டது. இதன் முதல் முயற்சியாக பத்ம ஸ்ரீ கமல்ஹாசன் அவர்கள்.
மட்டுமன்றி கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரு நேயர்ரக, ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளராக, ஈடுபட்டிருப்பதால் அதிகப் படியான விஷியங்களை உணர முடிகிறது.