வெள்ளி, பிப்ரவரி 13, 2009

எங்களூர் ஓடைக்கரை


எங்களூர் ஓடைக்கரை
இளைனர்களின்
அந்தப்புரம்- எனக்கு
ஆனந்தபுரம்...

சுட்டிப் பேச்சு பேசியது
குச்சிப் புடி ஆடியதும்
மனம் விட்டு பேசியதும்
மறக்க முடியாததும்
எங்களூர் ஓடைக்கரை...

காதல் பாடம் படித்த இடம்,
கவிதை எழுத கற்று கொண்ட இடம்,
கற்பனையில் மிதந்த இடம்,
கண்மணிக்கு காத்திருந்த இடம்...
எங்களூர் ஓடைக்கரை...

பொட்டு வைத்துப் பார்த்த இடம்,
பூச் சூடி ரசித்த இடம்,
கைகளை கட்டிக் கொண்டு
மெய் சிலிர்த்துப் போன இடம்
எங்களூர் ஓடைக்கரை...

செல்லமாய் பேசியதும்,
செல்லமாய் திட்டியதும்,
செல்லமாய் கடித்ததும்,
செல்லமாய் அடித்ததும்,
எங்களூர் ஓடைக்கரை...

எங்களூர் ஓடைக்கரை
இளைஞர்களின்
அந்தப்புரம்- எனக்கு
ஆனந்தபுரம்...