திங்கள், ஜனவரி 31, 2011

நான் ரசித்த ஹலோ எப்.எம்.
அக்டோபர் 2ம் தேதி 2006ம் தேதி சென்னை மக்களின் புதிய பொழுது போக்கு மற்றும் ஜனரஞ்சகமான விஷியங்களுக்காக , "நல்ல இசை, செல்லத் தமிழ்" என்ற தாரக மந்திரத்தோடு, சின்னக் குழந்தையாக, செல்லக் குழந்தையாக , ஹலோ எப்.எம் 106.4. இனிதே உதயமானது. அது வரை, ம்ற்ற‌ பண்பலைகளை கேட்டு, கேட்டு, போரடித்த சென்னை வாசிகளுக்கு, இது புது வரவு, அதிக மன நிறைவு, என்றே சொல்லலாம். நிகழ்ச்சிகளில் புதிய யுக்திகள் என்று மட்டுமில்லாமல், புதிய சிந்தனைகளுடன் படித்த அறிவாளி முதல், பட்டிக் காட்டு பாமரன் வரை, எட்டுத்திக்கும் ஓங்கி ஒலிக்கும் கொட்டும் முரசாக மாறியதில், ஆச்சர்யம் ஒன்றுமில்லை. நாளொரு மேனியும் பொழுதொரு வன்னமுமாக‌ சென்னை வாசிகளின் அசைகக முடியாத பேராதரவோடு, தமிழகத்தின் பண்பலை வரிசைகளில் முன்னனி இடத்தை பெற்று தனிப் பெரும் சக்தியாக உருவெடுத்தது.
கிளைகளுடன், களைகளைப் போக்க!
அடுத்தடுத்தத் வருடங்களில், தமிழகம் மற்றும் புதுவையில் 7 இடங்களில், மற்ற நேயர்களின் களைகளை போக்க‌ கவலைகளை நீக்க, தனது கிளைகளை நிறுவியது. கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற கூற்றுக்கு ஏற்றது போல், கால் தடம் பதிக்கும் அனைத்து இடங்களிலும், வெற்றி பெற்றது. ஒருமுறை ஒரு நேயர் இந்த ஹலோ எப்.எம்‍மை
கேட்க தொடங்கி விட்டால், பிறகு இதை விட்டு வெளியேருவது கஷ்டம் என்ற, நல்ல நிலை தான் இதற்கு காரணம்.
அணல் பறக்கும் சாதனைகள்.
மற்ற ரேடியோ நிறுவனங்களுக்கும், ஹலோ எப்.எம் மின் நிகழ்ச்சிகளுக்கும் விதியாசங்க‌ள் அதிகம். இந்த ஒரு காரணத்துக்காகவே, அதிகப் படியான நேயர்களைப் பெற்றுள்ளது. களத்தில் விளையாடும் கிரிக்கெட்டைப் போலவே, விளையாட முடியும் என்பதை செய்து, சாதித்துக் காட்டியது, மிகப் பெறிய சாதனையே!. இதை பின் பற்றி இன்று, இதைப் போலவே நிறைய இடங்களில் செய்யத் தொடங்கி விட்டார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. தொலை பேசியின் வாயிலாக நேயர்கள், ரன்களை கணித்து சொன்னால், பணத்தை வெல்லலம், என்பதே இதன் நோக்கம்.

பெற்றால் தான் பிள்ளையா?
இலாப நோக்கத்திற்க்காகவும், வர்த்தக ரீதியாகவும் மட்டுமே அடிப்படயாக ஆரம்பிக்கப் படும் சில மீடியா க்கலை ,பெற்றால் தான் பிள்ளையா? என்ற உயர்ந்த திட்டதின் மூலம் , இந்தக் கருத்துக்களை பின்னுக்குத் தள்ளியது, ஹலோ எப். எம் , மின் மிகப் பெறிய சாதனை. பி. எஸ். ஐ. என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த திட்டத்தை வெற்றி பெற வைக்க
நேயர்களுடன் இணைந்து, தானும் ஒரு நேயராக, மனிதாபிமான மனிதனாக இணைந்தார், பத்ம ஸ்ரீ கமல்ஹாசன். எச்.ஐ.வி‍ யால் பாதிக்கப் பட்ட ஏழைக் குழந்தைகளுக்காக தலா 750 ரூபாய் நிதியாக, ஹலோ எப். எம் , மின் நேயர்களிடமிருந்து பெறப் பட்டது. இதன் முதல் முயற்சியாக பத்ம ஸ்ரீ கமல்ஹாசன் அவர்கள்.
மட்டுமன்றி கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரு நேயர்ரக, ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளராக, ஈடுபட்டிருப்பதால் அதிகப் படியான விஷியங்களை உணர முடிகிறது.

திங்கள், ஜனவரி 04, 2010

பல கேள்வி, ஒரே பதில்

* பாரதப் போர் எத்தனை நாட்கள் நடந்தது?
* ராம - ராவண யுத்தம் எத்தனை மாதங்கள் நடந்தது?
* தேவ அசூர யுத்தம் எத்தனை நாட்கள் நடந்தது?
* பாரதப் போரில் எத்தனை வகைப் படைகள் பங்கு பெற்றன?
* மகா பாரதம் எத்தனை பர்வாக்களாக அமைந்துள்ளது ?
* பகவத் கீதை எத்தனை அத்தியாயங்களை கொண்டது?
* ஐயம் என்றால் சம்ஸ்கிருத மொழியில் எந்த எண்ணை குறிக்கும்?
* ராஜ நாகன் எத்தனை அடிகள் வரை வளரும்?
* "ஆக்டோ தேரிமோ" என்றால் என்ன?
* ஊட்டு பூட குறைந்த பட்ச வயது எத்தனை?
* கிசா பிரம்மீட்டில் பதிக்கப் பட்ட கல்லின் அகலம் எத்தனை அடி?
* சித்தர்கள் எத்தனை பீர்?
* பதினெண் கீழ் கணக்கு நூல்கள் எத்தனை?
 * புராணங்கள் எத்தனை?
* ஆடிப் பெருக்கை இப்படியும் சொல்லுவார்கள்?
* தென் அமெரிக்க பிராணி ஒன்று, ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் தூங்கும்?
* இலக்கிய கோமான் சோட்டன் எந்த வயதில் இறந்தான்?
 இது எல்லாத்துக்கும் ஒரே பதில் "பதினெட்டு".

ஞாயிறு, ஜனவரி 03, 2010

ஏ.சே.திலீப்குமார் (எ) ரஹ்மாஃன்.

வாழ்க்கைக் குறிப்பு:

ரகுமான் பிறந்த ஜனவரி 6ம் தேதி தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தவர். இயற்பெயர் திலீப்குமார். இசையுலகப் பயணம் ஆரம்பித்தது. இவரின் குடும்பம் இசை சார்ந்தது. இவரின் தந்தை சேகர் மலையாள திரைப்படத்துறையில் பணியாற்றியவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். கஷ்டத்தோடு பியானோ, ஹார்மோனியம் மற்றும் கிதார் வாசிக்க கற்று கொண்டார். தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்று கொண்டார். 11 வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். பின்னர் எஸ். விஸ்வநாதன்" ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன்"உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடன் பணியாற்றினார். டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார்.

இவரது மனைவி பெயர் ஷெரினா பானு. காதிஜா, கீமா, மின் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.1992 இல் தனது வீட்டிலேயே மியூசிக் ரெக்கார்டிங் தியேட்டர் அமைத்தார். இதே ஆண்டு வெளியான மணிரத்தினத்தின ரோஜா திரைப்படம், இவருடய வாழ்க்கையில் திருப்புமுனயாக அமைந்தது. படத்தின் பாடல்கள் அனத்தும் பிரபலமாயின. இவருக்கு முதல் தேசியவிருது வாங்கி தந்தது. பின்னர் மின்சாரக்கனவும்,லகான் இந்தி படமும்,படமும் இவருக்கு தேசிய விருகள் வாங்கி தந்தன.
முதல் படம் ஜப்பானில் வெற்றி பெற்று இவரது புகழ் உலகமெங்கும் பரவ தொடங்கியது. 2005
இவரால் வாங்கப்பட்ட ஏ.எம் ஸ்டுடியோ ஆசியாவிலே நவீன தொழிநுட்ப ரெகார்டிங் ஸடுடியோவாக உள்ளது.

தொடரட்டும் ஆஸ்கார் தமிழ் மகனின் சாதனைகள்

செவ்வாய், டிசம்பர் 29, 2009

2010 இப்படி இருக்குமோ?

புது வருடம் இப்படி இருந்தால் எப்படி இருக்கும்?.இது ஒரு சின்ன பதிவு தான்.யார் மனதையும் புண் படுத்துவது இந்த என்னுடைய பதிவின் நோக்கமில்லை ....







* நிலாவில் தண்ணீர் கண்டு பிடித்து விட்டதால்,வருடம் முடிவதற்குள் அங்க ஒரு நீச்சல் குளம் கட்ட படலாம்...

* மாநில கவர்னர் (திவாரி) "கில்மா" புகாரில் சிக்கினதால,இந்த ஆண்டு நெறைய முதல்வர்கள் இப்படி பட்ட புகாரில் சிக்கலாம்...

* போன ஆண்டு ஊட்டியில் நிலச்சரிவு வந்ததால,இந்த வருடம் எற்காடுல வர வாய்ப்பு இருக்கலாம்...

* ப.சிதம்பரம் மேல ஷூ வீசனதால இந்த வருடம் , வேற எந்த தலைவர்கள் மேல "முறம்" வீச படலாம்...

*குடி மகன்கள் போன வருஷத்த விட பெருகிப் போயிட்டதால, சரக்குத் துறை வருமானம் ஐம்பது முதல்எனபது கோடிகள் தாண்டும்.....


* இளைய தளபதியின் வெற்றிகரமான பத்தாவது தோல்வி படம் வெளிவரலாம்...

*என் தங்கத் தலைவன் ஜே கே. ரித்தீஷ்கு அமைச்சர் பதவி கெடைக்கலாம்....தன்மானத்தோடு அந்த பதவியை என் தலைவன் தூக்கி எறியலாம்...

* கடைசியாக என்னுடைய பதிவை அரங்கேற்றம் செய்யலாம்.....
அனைவருக்கும் இனியபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .

ஞாயிறு, டிசம்பர் 20, 2009











நீண்ட நாளுக்கு பிறகு ஒரு பதிவு.
கமலும் காதலும்... "கம்மர்கட்"

சென்ற வாரம் சனிக் கிழமை ஹெலோ எஃப்ம்ல் மதியம் 12 மணி முதல் மாலை 04 மனி வரை "கமலும் காதலும்" நிகழ்சியை 04 மணி நேரம் தொகுத்து வழங்கினேன். அதில் சிலவற்றை இப்பொழுது உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


பேச்சு 01
கமல் ஒரு குழப்பும்வாதி நடுத்தர வயதில்.கமல் ஒரு குழப்பவாதி இந்த வயதில். பேசாமல் பேசி, சொல்ல வரும் கருதுக்களை சொல்லி முடித்து,பட்டிக்காட்டு பாமரன் முதல்,அனைத்தும் அறிந்த அறிங்ஙர் பெரு மக்கள் வரை எல்லோரயும் யோசித்து குழம்ப வைக்கும் நிஜ குழப்பவாதி.எப்படியாவது சினிமாவில் நுழைந்தேயாக வெண்டும் என்று எண்ணி, தங்கமணி என்ற நடன உதவியாளரிடம் நடன உதவியாளராக சேர்ந்தார்.அந்த நேரத்தில் தான் "அன்னை வேளாங்கண்ணி" படத்தில் ஒரு பாடல் காட்சியில், இயேசுவாக சிலஉவை சுமந்து நடித்தார். சில காலம் காலத்தயும் சுமந்து, பிறகு இயக்குனர் பாலச்சந்தரிடம் உதவியாளராக, உஙகளுடன் வருகிறேன் என்டற உடன் " நீ நடிக்கலாமே என்றார்.உடனே பனிவின் சிகர‌மான கமல் சொன்ன வார்தை தான் இது. "நானே ஓணான் மாதிரி இருக்கேன், என்னப் போயி...?"என்று கேட்டிருக்கிறார். புரட்சித் தலைவருக்கும், பாலச்சந்தருக்கும் பிடித்து விட்டது போலும்.

அன்றே கமலுக்கு அடித்தது யோகம்.
இந்த மாபெரும் கலைனனை
அடையாளம் ண்டது தமிழ் சினிமாவின்
ஒப்பற்ற யாகம்.
(தொடரும்)...

வெள்ளி, பிப்ரவரி 13, 2009

எங்களூர் ஓடைக்கரை


எங்களூர் ஓடைக்கரை
இளைனர்களின்
அந்தப்புரம்- எனக்கு
ஆனந்தபுரம்...

சுட்டிப் பேச்சு பேசியது
குச்சிப் புடி ஆடியதும்
மனம் விட்டு பேசியதும்
மறக்க முடியாததும்
எங்களூர் ஓடைக்கரை...

காதல் பாடம் படித்த இடம்,
கவிதை எழுத கற்று கொண்ட இடம்,
கற்பனையில் மிதந்த இடம்,
கண்மணிக்கு காத்திருந்த இடம்...
எங்களூர் ஓடைக்கரை...

பொட்டு வைத்துப் பார்த்த இடம்,
பூச் சூடி ரசித்த இடம்,
கைகளை கட்டிக் கொண்டு
மெய் சிலிர்த்துப் போன இடம்
எங்களூர் ஓடைக்கரை...

செல்லமாய் பேசியதும்,
செல்லமாய் திட்டியதும்,
செல்லமாய் கடித்ததும்,
செல்லமாய் அடித்ததும்,
எங்களூர் ஓடைக்கரை...

எங்களூர் ஓடைக்கரை
இளைஞர்களின்
அந்தப்புரம்- எனக்கு
ஆனந்தபுரம்...

புதன், பிப்ரவரி 04, 2009

கிராமத்து தென்றல்...






அடர்ந்த காடுகளின் ஊடாக
கடந்து போனால் தவழ்ந்து
வருகிறது அந்த கிராமத்து தென்றல்
பச்சை பட்டடை
போர்த்தியது போல
வானுயர்ந்த மரங்கள்,

தவழ்ந்து வரும் மக்களை
அழைத்து அட்சதை தூவும்
அழகிய மலர் தோட்டங்கள்

காதலர்களுக்காகவே கடவுளால்
தரப் பட்ட அந்த
அழகிய கம்மாக்கரை...

கம்மக்கரைக்கு போட்டு
வைத்தது போல அந்த
மொட்டை பாலம்

ஊரின் ஒதுக்கு புறத்தில் உள்ள
பாட்டியம்மாவின் பெட்டி கடை...
பல்லாங்குழி ஆடும்
பள்ளி சிறுவர்கள்...

ஏர் கலப்பையை முதுகில்
தூக்கி சுமந்தபடி
செல்லும் உழவன்...
ஒற்றையடி பாதையில்
ஒரு மனிதனாக
செல்லும் ஓர் கிழவன்...
பட்டனத்தில் படிக்க
செல்லும் பெண்களின் ஒரு கூட்டம்,
பெண்களை நோட்டமிட்டபடி
செல்லும் ஆண்களின் மறு கூட்டம் ...

சிறு வயதில் பட்டம் விடவும்
பம்பரம் விடவும் கிடைத்த
பழைய நண்பர்கள்...

நீச்சல் கற்றுக் கொண்ட
அந்த செட்டியார் விட்டு
வட்ட கிணறு...

ஊரின் ஒதுக்கு புறத்தில்
மௌனம் காக்கும்
கல்லறைகள்...

இப்படியாக பல வருடங்களுக்கு
பிறகு மலர்கிறது என்
ஞாபக வெளிகளில் ..
"கற்பனை என்ற குறிஞ்சி பூ"

கண்ணீர் கண்ணீர் சிந்த
கடந்து போகிறேன்....
என் சொந்த கிராமத்திற்குள்...
கவலையை மறந்து....
" கிராமத்து தென்றல்"...