படித்ததில் பிடித்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படித்ததில் பிடித்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜனவரி 28, 2009

மன்னித்துக்கொள்...

காதல் உன் கடிதங்களோடு
உன் எல்லாவற்றையும்
திருப்பி கேட்டாய். தந்தேன்!

மன்னித்துக்கொள்!!
உன் காதலை திருப்பி கேட்ட
உனக்கு என் காதலையும்
கேட்டது என்ன நியாயம்???

என் காதல் மட்டும் இன்னும் அப்படியே...
நீ விட்டு போன மீதி
வசந்தங்களோடு நன்றாகவே!!!!

நான் மட்டும் தொலைந்து
போன அந்த நாட்களை
இன்னமும் தேடுகின்றேன்
திருடப்பட்டது புரியாமல்!!!!!

நேர்மை...

தூக்கத்தின்கரையோரமாய்
அமர்ந்து,அழுது
கொண்டிருந்தேன்.

ஆனந்தங்களால்
செய்தகவிதையொன்றுடன் மேலெழும்பி"
இது உன்னுடையதா?"என்றாய்.
இல்லை என்றேன்.
உள்ளே சென்று விட்டாய்.
இம்முறை,

மனிதர்களால் எழுத சாத்தியப்படாத,
உனைப்பற்றியகவிதையொன்றுடன் வந்தாய்.
மிகுந்த நேர்மையுடன்,
என்னுடையது இல்லையென்றேன்.

வட்டமிடும் அலைப்பரப்புகளின்
ஊடாகஉள்ளே சென்ற நீ,
விடியும் வரைவரவே இல்லை.'
உன் நேர்மைக்கு பரிசாய்
என்னையே எடுத்துக்கொள்'
என்று கூறியபடி. . .