நினைவில் நின்றவை-1

அப்படி என்ன பேசினார்? ...
"எனக்கு ரொம்ப புடிச்ச கலர் கருப்பு தான். ஆனா, அந்த கருப்பு கலரை இன்னமும் நான் பார்த்ததே இல்லை. அது சரி , அந்த கருப்பு கலர் எப்படி இருக்கும்"? என்று எதிர் கேள்வி கேட்டதும் என்னால் பதில் சொல்ல முடியவில்லை. காரணம் அவர் பிறவியிலேயே பார்வையில்லாதவராம் . இத்தனை மாதங்களாக அவர் பார்வை இல்லாதவர் என்பதே அன்று தான் எனக்கும், என்னுடைய நேயர்களுக்கும் தெரிந்தது. சிறிய இடை வெளியோடு தொடர்ந்து பேச ஆரம்பித்தவர், எனக்கு பார்வை மட்டும் தான் இல்லை. ஆனா, என்னுடைய வேலைகளை யாருடைய உதவியும் இன்றி நானே செய்து கொள்கிறேன் என்று நம்பிக்கை விதைகளை அள்ளி போட்டு இணைப்பை துண்டித்தார். அன்றைய நாள் முடியும் வரையும் அவரை பற்றிய சிந்தனை தான்...
மண்ணில் புதைப்பதற்கு பதில்
பிறர் கண்ணில் விதைப்போம்.
கண் தானம் செய்வோம்!!!
பிறர் கண்ணில் விதைப்போம்.
கண் தானம் செய்வோம்!!!